227-வது தெய்வீக நாமம்:
மா ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரத்திலிருந்து
“மஹா மந்திரம்”
THE DIVINE MOTHER WHO PROVIDES BLESSINGS TO THE SACRED MANTRAS FOR THEIR EFFICACY
படைப்பு என்பது அதிர்வு – அசைவு – காலத்தின் இன்றியமையாத கூறு. காலத்தை ஒரு சூத்திரமாக – ஒரு நூலாக – ஒரு கணத்தை அடுத்த கணத்துடன் இணைப்பதாக நீங்கள் எண்ணினால் – மா மந்த்ரிணீ, மா ராஜஸ்யாமளா என்றும் அறியப்படும் மா மாதங்கியின் தெய்வீக வீணை – அதிர்வுகளின் தற்செயல்த் தன்மையின் வழியாக, காலத்தின் வரம்புகளைக் கடந்து, பிரபஞ்சம் முழுவதும் ஒலித்து அதிர்கிறது. ஆகவே, தெய்வீக அன்னையின் ஆசீர்வாதங்களின் ஊடகம், நீங்கள் வாழ்வின் தற்செயல் நிகழ்வுகள் என்று அழைப்பவற்றின் வழியாகவே பெரும்பாலும் அமையலாம் என்னும் உணர்வுடன் ஆசீர்வாதங்களை வேண்டுங்கள். ஆகவே, வாழ்வில் வரும் தற்செயலான மனிதர்கள், நிகழ்வுகள் முதலியவற்றை – தெய்வீக ஆசீர்வாதங்களின் மூலமாகக் கருதி எதிர்பாருங்கள்.
